திட்டம் இரண்டு (2021) திரைப்படம் எதன் அடிப்படையில் ட்ரான்ஸ்போபியா?

மாற்றுப்பாலினத்தவரின் தினசரிகளோ அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சமூக நெருக்கடிகளோ ஆவணப்படுத்தப்படாமல் ஒருதலைக் காதலின் போராட்டம் என்னும் பெயரில் (அதுவும் சிறுவயதில் முதன் முதலாக எதிர்கொள்ளும் பாலீர்ப்பு காதலின் நீட்சியாகவே கதை தொடர்கிறது) அவர்களின் பாலினத்தை பரிதாபகரமாக காட்ட முனைந்து இறுதியில் Transphobic பார்வையில் “ஆள் மாறாட்ட மோசடியாக” காட்சிப்படுத்தி கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.பாலின அடையாள நெருக்கடியிலுள்ளவரின் குரலை முன்நிலைப்படுத்தாமல் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரே நோக்கில் திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது. படம் பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் (gender reassignment surgery ) புதிதாக தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த முனையும் தொனியில்  எதிர்பாராத அதிர்ச்சியை மட்டுமே பின்புலமாக வைத்து (அந்த அதிர்ச்சியும் அறுவை சிகிச்சை மூலம் ஓர் பெண் ஆணாக மாறியுள்ளார் பாருங்கள் என்கிற வினோதத்தன்மை பொருந்திய ஆச்சர்யத் தொனியுடன்) thriller elements மூலம் பார்வையாளர்களை exploit செய்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிரா கதாப்பாத்திரம் (ஐஸ்வர்யா ராஜேஷ்) போலீசாக இருந்தும் ஒரு பெண்ணாக க்ளைமேக்ஸ் வரை மாற்றுப்பாலினமாக காட்சிப்படுத்தப்படும் ஆண்  கதாப்பாத்திரம் மற்றும் டாக்டர்,போலீஸ் என ஒரு கூட்டத்தால் அலைக்களிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இத்தனையும் எதற்காக?   மாற்றுப்பாலின சிகிச்சை மேற்கொண்ட நபர் தன் பிறப்பு பாலினஅடையாளத்தை மட்டுமல்லாது தன் பிறந்து வாழ்ந்த முழுச் சுவட்டையுமே அழித்து தான்கொல்லப்பட்டதாக புனைந்து குடும்பம், சமூகம் என அத்தனை பேருக்கும் பயந்து அனைவரையும் ஏமாற்றி தன் புது அடையாளத்தை நிறுவிக்கொள்ள.இன்னும் தான் சிறுவயதிலிருந்து ரகசியமாக விரும்பிய பெண்ணை அடைந்து Read More

“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை

கவிஞரும் சுயாதீனத் திரைப்பட இயக்குனருமான  லீனா மணிமேகலையின் மாடத்தி(Maadathy)திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புகிட்டியது.இயக்குனரின் தெளிவான பார்வையும் முதிர்ச்சி நிலையும் தமிழ் சமூகத்திற்கு புதுமையானதும் அத்தியாவசியமானதும் கூட. உண்மையில் சாதியம்,தீண்டாமை பற்றி பேச முனைபவர்கள் பெண்ணிலிருந்து ஆரம்பிப்பதே அறம் என்பது என் நிலைப்பாடு.ஒரு பெண் எந்த வர்க்கத்தில் ஜாதியில் பிறந்தாலும் அவள்  இடம் சூத்திரருக்கும் கீழ்தான்.ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றொரு தனியரை பாலின அடிப்படையில் ஒடுக்கும் எல்லைக்கு போவது குறித்து பிரக்ஞைப்பூர்வமாக இருக்க, ஒடுக்குதலின் கீழ்மையயையும் அதன் அரசியலையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவை இந்தியச் சூழலில் நிலவுகிறது.இங்கு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மேலே வர எத்தனிப்பவர்கள்,தாங்கள் “ஆண்” என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து,நிறுவி அதன்மேல் ஏறி நின்று அரசியல் பேசி,தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைக்கிறார்களே ,ஒழிய யாரும் பாலின உடைப்பை நிகழ்த்தி,ஆணாதிக்கத்தை களைந்து விட்டு  அரசியல் பேச முன்வருவதில்லை.இங்குதான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென குரல்கொடுக்கும் இடத்தில் பெண்ணிற்கான இடம் புறந்தள்ளி விடப்பட்டு,அது தனியாக இங்குள்ள ஆண்மையச் சிந்தனைவாதம் கொண்டவர்கள் சொல்வது போல் பெண்ணியம் என்ற ஆடம்பர வார்த்தைக்குள் சிக்குண்டு “பெண்ணியம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல், பெண்ணியம் வன்புணர்விற்கு எதிரான குரல்,” என்னும் கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.இவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் மாறி மாறி அதிகாரத்தை உள்வாங்கி வன்முறைகளாகவே சமூகத்தில் பரிணமித்துவிட வழி கோலப்படுகின்றன.இன்னும் ஜாதி, மதம்,இனம்,மொழி,ஆடைக் கலாச்சாரம் போன்ற இன்ன பிறபெயர்களைக் கொண்டு  பெண்களை வன்புணர்ந்து விட்டு (patriarchy) “ஆணாதிக்கம்” என்னும் Read More

நிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.

சினிமா மனித இருத்தலின் ஒப்பற்ற ஆவணம். அதன் கலாச்சார தாக்கமானது சமூகங்களின் பார்வையை நிர்ணயிப்பது மட்டுமல்லாது அதன் தோற்றத்தை நிர்ணயிப்பதையும் கூட சாத்தியமாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் கண்ணாடியாக சினிமா பார்க்கப்படும் பொழுது, அந்த கண்ணாடியில் நிலழாடும் பிம்பங்களே அந்தசமூகத்தின் தோற்றத்தினை வடிவமைக்கிறது.அமெரிக்க சினிமா உலகெங்கும் பெரும் காலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க சினமாவின் முகங்கள் யாருடையது? அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது? குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும்  உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது? என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன? அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது? என்ற பார்வையையும் இந்த கட்டுரை வழங்க முயற்சி செய்கிறது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம்முடைய வீடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை நாம் திருப்பிப்பார்த்தால் இயல்பை விட நமக்கு தெரிந்தவர்கள் அடர் கருப்பாக தோற்றமளிப்பதை கவனித்திருப்போம். ‘கண்ணும் பல்லும் மட்டும் பளிச்சுன்னு தெரியுது பாருன்னு’ கருப்பாக இருக்கும் Read More

Game Over (2019)ஒரு பார்வை

இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்களில் Game Over திரைப்படம் ஓரளவு கருத்தியல் ரீதியாக முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த பாலியல் வன்மத்தின் பின்  இருக்கக்கூடிய “Sexual Trauma” விலிருந்து அந்த பெண்ணே மீண்டு வருவது போன்ற கருத்தியலும் காட்சியமைப்பும் தமிழ் சமூகத்தில் புதுமையான அணுகு முறையாக முன்னிறுவிப் பேசபட்டது. எனக்குத்தெரிந்து கருத்தியலை,கதாப்பாத்திரங்களை,நேர்த்தியாக கட்டமைக்காதவிடத்து எவ்வளவு தீவிரமான, உணர்வுப்பூர்வமான விடயத்தை பேச முற்பட்டாலும் அத்திரைப்படம் வெறும் சுவாரஷ்யத்தை கொண்டு பார்வையாளர்களின் சுரண்டலுக்கும்(Exploitation),நுகர்வுக்குமான திரைப்படமாகவே அணுகப்படும்.அதைத்தான் இயக்குனர் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் பெண்களை காட்சிப்படுத்தும் விதத்திலும் பிரதிபலிக்கச்செய்திருக்கிறார். திரைப்படத்தில் முதல் பாதி தேவையற்ற மிக மேம்போக்கான மற்றும்  பார்வையாளர்களுக்கு உணர்வுகளைத்தூண்டும் என்ற நம்பிக்கையின் பேரில்  போராட்ட குணமிக்க ஒரு பெண்ணை முன்னிறுவுவதாக சஞ்சனா என்னும் கதாப்பாத்திரம் காணப்பட்டது.இங்கு அந்தப்பெண் எதிர்கொள்ளும்“புற்றுநோய்” (cancer)என்னும் விடயம் ஆண்களைக்குறிக்கும் உவமையாக அல்லது குறியீடாக அவதானிக்க முடிந்திருந்தாலும்;அம்முன்கதை வெறும் உணர்ச்சிப்பிழம்புகளை தமிழ் சமூகத்தில் வழக்கமாக கட்டமைக்க முனைவது போல போலித்தன்மை நிறைந்ததாக கட்டமைத்திருப்பது  அப்பட்டமாகத் தெரிகிறது.இது போக ஒருவித அமானுஷ்ய தன்மையை சஞ்சனாவின் அஸ்தியினூடாக tatto வில்  தப்சியின் உடலில் ஏற்றப்படுவதன் மூலம் சஞ்சனாவின் கேன்சருக்கு எதிராக போராடும் குணம் தப்சியிடம் உள்வாங்கப்பட்டு அவர் தனக்குள் நிகழும் trauma விற்கெதிராக போராடுவதாக காட்சிப்படுத்தப்படுவது யதார்த்தத்தை ஒரு விதமாக சீர் குலைத்து அமானுஷ்யத்தையே முன்னிறுவுவதாக தோன்றியது.ஆக அஸ்தி,ஆவி, அமானுஷ்யம் என்ற தோரணையில் தான் சமகாலப் பெண்ணின் இருப்பு மற்றும் உளவியல்,உடலியல் போராட்டங்கள் நம்முன் Read More

“சைக்கோ” – ஓர் உளவியல்ப் போலி

‘சைக்கோ’ திரைப்படம் வெளியாகிய முதல் வாரத்தில் அதற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட மிஷ்கினின் அதிக வசூல் திரைப்படமாகவும் இது உருமாற வாய்ப்புள்ளதோ என்று தோன்றுகிறது.இங்கு வெளிவந்து கொண்டிருக்கும் சினிமாக்களின் மத்தியில் ‘சைக்கோ’ கையாண்டிருக்கும் கதைக்களம் வேறெந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிட இயலாத ஒரு தனியிடத்தைக்  கோருகிறது. வெற்றிப் படங்களை உருவாக்குகிறேன் என்கின்ற பேர்வழியில் திரும்பத் திரும்ப வழமைக்கு மாற்றமில்லாத ஒரே மாதிரியான திரைப்படங்களை உருவாக்கும் மசாலா நடைமுறையிலிருந்து சைக்கோ எந்தளவிற்கு தூரம் சென்றுள்ளது என்பதில் சந்தேகம் உள்ளது. அதாவது, கதைக்கருவின் மையத்தின்பால் பார்வையாளர்கள்  கடுமையாக ஈர்க்கப்பட்டதனாலோ என்னவோ முக்கியத்துவமற்றதாகக் கருதப்படும் படத்தின் இதர பகுதிகளை படக்குழுவினர் மேம்போக்குத்தனத்துடன் கையாண்டிருப்பதனைப் படத்தைக் கொண்டாடும் பார்வையாளர்கள் உண்மையிலேயே கவனிக்கவில்லையா அல்லது அவர்கள் கண்டும் காணாதது போல பாவனை செய்கின்றனரா எனத் தெரியவில்லை. இத்தகைய வழக்கமான தமிழ் சினிமாப்பாங்கில் சற்றும் அடிபிரளா காட்சிகள்  முதல் பாதியில் ஏராளம். நாயகர் கவுதமுக்கும் தாகினிக்கும் இடையில் காதல் உருவாவதை காண்பிக்கும் காட்சிகள் முதற்கொண்டு,தாகினி கடத்தப்படும் இடம் வரை காட்சிப்படுத்தப்பட்டவைகள் யாவுமே மிஷ்கின் கோரும் மாற்று/ஆத்தேர் சினிமா ரகத்துக்கு எந்த அளவுகோல்களிலும் பொருந்தாதவை. தமிழ் சினிமாவில் காலங்காலமாக தூக்கிப்பிடிக்கப்படும் பெண்ணுடற் பண்டமாக்கலை முன்னிறுவித்தான் பார்வையாளர் மனங்களில் நாயகியின் அழகை இயக்குனர் பதிய வைக்கிறார். ஒரு நூலகத்திற்குள் ஸ்லீவ்லஸ் ஆடையை  அணிவித்து, இடுப்பை இங்குமங்குமாக ஆட்டி ஆட்டி அவரை நடக்கச் செய்து என இவற்றையெல்லாம் கண்டு ஆர்ப்பரித்த பார்வையாளர் கூட்டத்தை இறுதியில் Read More