“மாடத்தி (2019)” தமிழ் சினிமாச்சூழலுடன் ஓர் ஒப்பீட்டுப்பார்வை

கவிஞரும் சுயாதீனத் திரைப்பட இயக்குனருமான  லீனா மணிமேகலையின் மாடத்தி(Maadathy)திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு பார்க்கும் வாய்ப்புகிட்டியது.இயக்குனரின் தெளிவான பார்வையும் முதிர்ச்சி நிலையும் தமிழ் சமூகத்திற்கு புதுமையானதும் அத்தியாவசியமானதும் கூட. உண்மையில் சாதியம்,தீண்டாமை பற்றி பேச முனைபவர்கள் பெண்ணிலிருந்து ஆரம்பிப்பதே அறம் என்பது என் நிலைப்பாடு.ஒரு பெண் எந்த வர்க்கத்தில் ஜாதியில் பிறந்தாலும் அவள்  இடம் சூத்திரருக்கும் கீழ்தான்.ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மற்றொரு தனியரை பாலின அடிப்படையில் ஒடுக்கும் எல்லைக்கு போவது குறித்து பிரக்ஞைப்பூர்வமாக இருக்க, ஒடுக்குதலின் கீழ்மையயையும் அதன் அரசியலையும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டிய தேவை இந்தியச் சூழலில் நிலவுகிறது.இங்கு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து மேலே வர எத்தனிப்பவர்கள்,தாங்கள் “ஆண்” என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து,நிறுவி அதன்மேல் ஏறி நின்று அரசியல் பேசி,தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைக்கிறார்களே ,ஒழிய யாரும் பாலின உடைப்பை நிகழ்த்தி,ஆணாதிக்கத்தை களைந்து விட்டு  அரசியல் பேச முன்வருவதில்லை.இங்குதான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கென குரல்கொடுக்கும் இடத்தில் பெண்ணிற்கான இடம் புறந்தள்ளி விடப்பட்டு,அது தனியாக இங்குள்ள ஆண்மையச் சிந்தனைவாதம் கொண்டவர்கள் சொல்வது போல் பெண்ணியம் என்ற ஆடம்பர வார்த்தைக்குள் சிக்குண்டு “பெண்ணியம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான குரல், பெண்ணியம் வன்புணர்விற்கு எதிரான குரல்,” என்னும் கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு விடுகின்றன.இவை சரியாகப் புரிந்து கொள்ளப்படாத பட்சத்தில் மாறி மாறி அதிகாரத்தை உள்வாங்கி வன்முறைகளாகவே சமூகத்தில் பரிணமித்துவிட வழி கோலப்படுகின்றன.இன்னும் ஜாதி, மதம்,இனம்,மொழி,ஆடைக் கலாச்சாரம் போன்ற இன்ன பிறபெயர்களைக் கொண்டு  பெண்களை வன்புணர்ந்து விட்டு (patriarchy) “ஆணாதிக்கம்” என்னும் Read More

“Visitor Q”(2002) திரைப்படம் குறித்தான ஒரு பார்வை

அறிமுகம்   ஜப்பானிய திரைச்சூழலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக கல்ட் (Cult) திரைப்படங்களை உருவாக்கிக் குவிக்கும்  இயக்குனர்  Takashi Miike, 1991 அறிமுகமானதிலிருந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சர்ச்சைக்குரிய என்று வகைப்படுத்தப்படும்  திரைப்படங்களுக்கான தேவையும் தனி ரசிகர் பட்டாளங்களும் உருவாகி பெருகிவளர்ந்து கொண்டிருக்கிறது. வி-சினிமாத்துறைனுள் (V-Cinema industry) குறைந்த செலவில், கையிலுள்ள வளங்களைக் பயன்படுத்தி  மாத்திரம்  உருவாக்கப்படும் Direct-to-video பாணியில் தணிக்கைக்குளுக்களின் தலையீடின்றி மும்முரமாகவும் சுதந்திரமாகவும் வருடத்திற்கு ஏழு படங்கள் வரையில் இயக்கும் சாத்தியப்பாட்டை நிகழ்த்தி ஜப்பான் சுயாதீன இயக்குனர்களில் தவிர்க்கவியலாதவொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்  இயக்குனர் டக்காஷி மிக்கே. ஒளிவுமறைவில்லாமல் வன்முறைகள், நிர்வாணக் காட்சிகளை பதிவு செய்தல், பார்வையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச்  சூழல்களை தோற்றுவித்தல் இயக்குனரின் பிரதான போக்கு எனலாம். குறிப்பாக ஜப்பான் சமூகத்தின் இளைஞர்களின் அத்துமீறல் போக்கு, குடும்ப அமைப்பு, பாலின அரசியல், வன்புணர்வு,பாலியல் சிக்கல்கள், Bullying, சாமுராய்கள் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் பிரத்தியேகமாக உருவான யக்குசாக் குழுக்களின் வாழ்வியல் என ஏகப்பட்ட தளங்களை தயவு தாட்சண்யமின்றி அப்பட்டமாக விமர்சிக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் கதைக்களங்கள் Bullyingஐயே மையப்படுத்தியமைந்திருக்கும். இன்னும் காமிக்ஸ்களை திரையாக்கும் பாணியும் விரவிக்காணப்படும். திரைப்படங்கள் பேசும் கருத்தியலின் அடர்த்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மிக ஆர்வமூட்டும் அதே சமயம் அதிர்ச்சியை மேலோங்கச்செய்யவும் தவறவிடவில்லை. ஒரு திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட வன்மக் காட்சிகளை பிற திரைப்படங்களில் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு புதுப்புது யுக்திகளை வன்மங்களை Read More

குறியீட்டுவாதத்தின் எதிரி

1984ம் ஆண்டு இலண்டனில் ஐரேனா ப்ரெஸ்னா என்ற பெண்ணுக்கு இயக்குனர் ஆந்த்ரே தார்கோவ்ஸ்கி வழங்கிய நேர்காணல். நேர்காணல் அறிமுகம்:புல்புல் இஸபெல்லா,ப்ரதீப் பாலு நேர்காணல் தமிழில் மொழி பெயர்ப்பு:ப்ரதீப் பாலு நேர்காணல் குறித்து ஒரு பார்வை/அறிமுகம் இன்றைய உலகின் தலைச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவராகக் கருதப்படுபவரான ஆந்த்ரே தார்கோவ்ஸ்க்கி, மனித வாழ்வியலின் பல்வேறு ஆழங்களிலும், சில மானுட உண்மைகளுக்குள்ளும் தனது பிரத்யேகத் திரைமொழியைக் கொண்டு இலாவகமாக பயணித்து அவற்றைத் திரையில் காண்பித்தவர். பிரபல ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸ் (Roger Deakins) உட்பட உலகில் தற்பொழுது வாழ்ந்து வரும் பல முன்னணி ஒளிப்பதிவாளர்களும் தார்கோவ்ஸ்க்கியுடன் ஒரு திரைப்படத்திலாவது பணி புரிய வாய்ப்பு கிட்டியிருக்க வேண்டுமென தங்கள் ஆர்வங்களை பல நேர்காணல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இத்தகைய நேர்த்தியான மற்றும் தனித்துவமான திரை மொழிகளினூடே திரைப்படங்களை உருவாக்கி பார்வையாளர்களை அதிர்ச்சியூட்டிய தார்கோவ்ஸ்க்கி, திரைப்படங்களில் வெளிக்கொணர்வது போன்றே தனது தனி வாழ்கையிலும் வீரியமிக்க ஆன்மீகப் பார்வைகளை கொண்டிருப்பவர்.கிறித்துவ மத நாகரிக வளர்ச்சியில் ரஷ்ய நிலப்பரப்பு வகித்த இடத்தைப் போலவே, தார்கோவ்ஸ்க்கியும் மேற்குக் கலாச்சாரத்திற்கும் கீழைத்தேய கலாச்சாரத்துக்கும் இடையிலொரு நடுப்புள்ளியாகவே திகழ்கிறார். அதையொத்த புராதன மானுடத் தத்துவவியல்களின் பிரதிநிதியாக அவர் தன்னை நிறுவிக் கொள்கிறார். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. ரஷ்ய கம்யூனிச புரட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பொதுமக்களின் தொழில்துறை உயர்வுகள், அவர்களது ஆன்மீக உயர்வுகளுக்கு வித்திடவில்லை. ரஷ்ய நாட்டில் தூக்கியெறியப்பட்ட முதலாளித்துவ மற்றும் பூர்ஷுவா வர்க்க அறங்களை, கிறித்துவ மதம், ரஷ்ய மக்களின் மனங்களில் Read More

நிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.

சினிமா மனித இருத்தலின் ஒப்பற்ற ஆவணம். அதன் கலாச்சார தாக்கமானது சமூகங்களின் பார்வையை நிர்ணயிப்பது மட்டுமல்லாது அதன் தோற்றத்தை நிர்ணயிப்பதையும் கூட சாத்தியமாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் கண்ணாடியாக சினிமா பார்க்கப்படும் பொழுது, அந்த கண்ணாடியில் நிலழாடும் பிம்பங்களே அந்தசமூகத்தின் தோற்றத்தினை வடிவமைக்கிறது.அமெரிக்க சினிமா உலகெங்கும் பெரும் காலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க சினமாவின் முகங்கள் யாருடையது? அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது? குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும்  உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது? என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன? அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது? என்ற பார்வையையும் இந்த கட்டுரை வழங்க முயற்சி செய்கிறது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம்முடைய வீடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை நாம் திருப்பிப்பார்த்தால் இயல்பை விட நமக்கு தெரிந்தவர்கள் அடர் கருப்பாக தோற்றமளிப்பதை கவனித்திருப்போம். ‘கண்ணும் பல்லும் மட்டும் பளிச்சுன்னு தெரியுது பாருன்னு’ கருப்பாக இருக்கும் Read More

ஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)

தற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு  ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம்  கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும். சென்ற வருடம்  ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும்  Read More

சுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018)

தன் பாலினம் குறித்து பதட்டம் கொள்ளச்செய்யவும்,பெரும்பான்மை சமூகம் அங்கீகரிக்கக்கூடிய உடலியல் கூறுகள், இன்னபிற  அலங்காரங்களைக்கொண்டு தன்னைக்குறித்த பாலினத்திற்குள் வகைப்படுத்தி அடைத்துக்கொள்வதற்கும் ஏதுவாகவே சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. புறத்தோற்றம் மற்றும் பாலியல் உடற்கூறுகளைக் கொண்டுதான் ஒருவறது பாலினம் தீர்மானிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் இன்னபிற சலுகைகளும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதெனில், சமூகத்தில் பாலினம் பற்றிய இருப்பு குறித்து  சிந்திக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் தற்காலத்தில் தன் இயல்பான உடலை தானே வெறுக்கச்செய்ய, தன் உடலியல் கூறுகள் குறித்து மனதளவில் அதிருப்தியடையும் நிலையை உருவாக்கக்கூடியவாறே பாலின அரசியல் சமூகத்தில் இறுக்கமாக  நிறுவப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு நபரின்  பாலின அடிப்படையைக் கொண்டு “இவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் அல்லது வாழவேண்டும்” என்று குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு பல்வேறான அழுத்தங்களை கொடுக்குமிடத்து, அந்நபர் உளவியல்,உடலியல் ரீதியாக எந்தளவுக்கு சுய சந்தேகத்துடனும் சுய வெறுப்புடனும் வெறுமையாக தன்  தினசரி வாழ்க்கையைக் கடத்துவார் என்பது பெரும்பான்மையாக பேசாப் பெருந்துயர். Gir(2018) திரைப்படம் “பெண்ணாக” மாறத்துடிக்கும் இளம் மாற்றுப்பாலின பாலே நடனத்தில்(ballet dance) பேரார்வமிக்க Lara எனும் கதாப்பாத்திரத்தின் உளவியல், உடலியல்,பாலியல் சிக்கல்களை ஆராய முனைகிறது.Nora Monsecour எனும் தேர்ச்சிபெற்ற பாலே நடனகலைஞரின் உண்மைக்கதையின் மையத்தை மேம்போக்கான அடிப்படையில் உள்வாங்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.பருவவயதை எத்தனிக்க தயாராகவிருக்கும் லாரா ஒரு பெண்ணாக இருக்க விரும்பி பாலின மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகளை(gender reassingment surgery)மேற்கொண்டு வரும்போது அதில் முழுமையாக நம்பிக்கையும் பொறுமையுமற்றவராக காணப்படுகிறார்.தாராள வாத,தொழிநுட்பத்தில் Read More

what will people say (2017)

“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More

Black Girl (1966)

மேற்காபிரிக்காவின் அதிகாரப்பூர்வமான குடியரசு நாடான senegalsஇல் பின்தங்கிய சூழலில் வசிக்கும் Diouanaஎன்னும் கறுப்பின இளம்பெண்ணின் புலம்பெயர்வின் கதை Black Girl(1966).[Original title “La Noir De”] செனகல்நாட்டு இயக்குனர்  (Senegalese Director )Ousmane Sembene இன் முதல் முழு நீளத்திரைப்படமான Black Girl சர்வதேச அரங்கில் ஆபிரிக்க சமூகத்திற்கான ஒரு தனித்துவமான அடையாளத்தை அறுபதுகளிலேயே விட்டுச்சென்றது. இயக்குனர் Sembene திரைப்பட இயக்குனராக முன்னமே ஒரு நாவலாசிரியராக இருந்தவர்.நாவல் சிறந்த ஊடகமாக இருந்தும் கூட  பெரும்பாலும் கல்வியறிவற்ற தன் ஆபிரிக்க சமூகப்பார்வையாளரை சென்றடைவதற்கு சிறந்த ஊடகம் சினிமாதான் என்றறிந்த தருணம்  நாவலாசிரையரிலிருந்து தன்பார்வையை திரைப்படத்துறையின் பக்கம் திருப்பிக்கொண்டார்.1920 க்குப்பிறகு வட ஆபிரிக்காவில் பல திரைப்படங்கள் வந்த போதிலும் அவை பொதுவாக அரபு சினிமாவுடன் தொடர்புடையனவாகவே இருந்தன. இத்திரைப்படமானது துணை  saharan-africa விலிருந்து வெளிவந்த  முதல் நாடாக இருந்ததோடு இயக்குனரது சொந்த நாடான senegalsஇலேயே உருவாக்கப்பட்டது.அந்த காலகட்டத்தில் திரைப்பட உருவாக்கத்திற்கான வளங்கள்,கட்டமைப்புகள்,தொழிநுட்ப வசதிகள்,நிதி ஆதாரங்களோ எதுவுமே இல்லாதபோதும் கூட இயக்குனர் sembene உண்மையில் ஆபிரிக்க சினிமாவைப்பற்றிகொண்டதன் விளைவாக Black girl போன்றதொரு பிரதான திரைப்படம் ஆபிரிக்க சினிமாக்களுக்கு அடித்தளமாக  என்றுமே நிலைத்திருக்குமாறு உருவாக்கி விட்டிருந்தார். Black Girl திரைப்படம் அவரது சொந்த எழுத்துக்களின் தழுவல்.1962 ஆம் ஆண்டில் அதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.அந்நாவலை எழுதுவதற்கான அசலான தூண்டுதலானது ,பிரஞ்சு செல்வந்த வீட்டில் வேலைபார்த்த ஆபிரிக்க வீட்டுப்பணிப்பெண் அவர்களது குளியல் தொட்டியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி பிரஞ்சுப்பத்திரிகையில்வந்திருந்த கட்டுரையில் இருந்து உருவானது.கிட்டத்தட்ட எந்தத்தகவலும் இல்லாத Read More

வாழ்க்கை கவிதைகளால் ஆனது.“paterson”(2016)

It is difficult to get the news from poems yet; men die miserably every day for lack of what is found there. – William carols Williams- கவிதைகள் யதார்த்தத்திகுப் புறம்பானவையாக, கற்பனையானவையாக இருக்கலாம். ஒன்றுகொன்று முரண்பட்டிருக்கும் அதேவேளை  பொருத்தமான மொழிக்கோர்வைகளால் மட்டும் இணைந்திருக்கலாம். சரி ஒரு வித மொழி விளையாட்டாகவே  இருக்கட்டுமே! கவிதை எதையும் செய்யப்போவதுமில்லை.எதையும் செய்யச் சொல்லுமாறு தூண்டுவதுமில்லை.அது அதன் பாட்டில் இருந்துவிடுகிறது.அதனை அதன் இருப்பிலேயே ரசித்து விட்டுப்போகிறோம்.அத்தகைய கவிதை வடிவிலான,ரசிப்பதற்கு மட்டுமே உரித்தான  திரைப்படம்தான்  “paterson”(2016) இயக்குநர் Jim Jarmusch தன் சுயகற்பனையைக்கொண்டு அவரது முழு உலகையும் மெல்லிய சந்தத்தோடு எளிமையான கையாண்டிருக்கிறார்.மனிதர்களது பொதுவாழ்க்கையில் கவிதை இல்லாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையான திரைப்படங்களில் அவை பற்றிய எவ்வித குறிப்புகள் வழங்காமல் விட்டதுமாகும் என்றதொரு குற்றச்சாட்டும் உண்டு.ஒரு திரைப்பட இயக்குநர் தன் திரைப்படத்தில் கவிதைகளை, அது சார்ந்த ரசனை மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்தும்போது கவிஞர்களும் கவிதையும் இலகுவாக பிரபல்யம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்னும் கவிதைக்கான தேவைப்படுகளும் மக்களின் ரசனையும் கூடலாம். ஆனால் நம் சமூகத்தில் இங்கே யார் யார் கவிஞர் என்று தேடிப்பார்க்கும் வரையில் அல்லது “நான் ஒரு கவிஞன்; என் கவிதைகள் வாசித்ததுண்டா?” என அவரே அவரது வாயால் கேட்கும் வரையில் யாருக்கும் யாரையும் தெரியாது. திரைப்படங்களில் கவிஞர்களை மெச்சியதும் மிக அரிது. இவற்றிற்கு புறம்பாக இத்திரைப்பட இயக்குநர் ஒரு படி மேலே போய் கவிதைகளாலும் கலைகளாலும் நிரப்பப்பட்ட ஒரு திரைப்படத்தை கவிதையாகவே Read More

நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்

தனிமையைத் தானாக தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களாயினும் சரி அல்லது பிறரால் கைவிடப்பட்ட நிலையில் தனிமையில் உழன்று கொண்டிருப்பவர்களாயினும் சரி, ஒரு எல்லைக்குமேல் அதனை ஜீரணிக்க முடியாமல் நாம் தள்ளாடுகிறோம். அத்தகைய தனிமையை கலைகளாலும் ஏதோ முன்பின் அறிமுகமற்றவர்களின் சிலகண நேர அரவணைப்பினாலும் பூர்த்தியாக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். காதல், தனிமை, வெறுமை,  காதலைக்கடந்து செல்லல், இன்னொரு காதலுக்குள் வீழ்தல், உறவுச்சிக்கல், அகக்கொந்தளிப்புகள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருமனிதனும் தன் வாழ்வில் அனுபவித்துத் திளைத்திருக்க வேண்டியவை. இந்த உணர்வுகள் இவ்வுலகிற்குப் புதுமையான ஒன்றுமல்ல இன்னும் காதல் செய்வது மாபெரும் குற்றச்செயலுமல்ல.  இத்தகைய மனித மனதின் அகச்சிக்கல்களையும் காதல் மற்றும் தனிமையை கடந்து செல்ல எடுக்கும் பிரயத்தனங்களையும் மக்களின் அன்றாட வாழ்வியலோடு ஒன்றித்து காட்சி மொழியின் மூலம் கவிதையாக வடிக்கும் வல்லமை பெற்றவர்தான் இயக்குநர் “Wongkar-wai”.  அவரது ஒவ்வொரு திரைப்படத்தையும் தனிமையின் விளிம்பில் தவித்திருக்கும் போதே பார்த்திட வேண்டும்.  காதலில் வீழ்ந்து தொலைந்து போகும் யுக்திகளையும், காதலையும் தனிமையையும் கடந்து செல்லும் யுக்திகளையும் மிகவும் லாகவமாக காட்சிப்படுத்தியிருப்பார்.  இருந்தும் இவரது படங்களின் காட்சிகளையும் எளிதில் கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி நினைவு கூர்ந்து கொள்வோம்.  தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் இன்னொரு படத்தின் காட்சிகளின் வசனங்களின் தடையங்களை நாம் அடையாளம் காணக்கூடியவாறு அங்கங்கே விட்டுச்சென்றிருப்பார்.  அந்த வகையில் Happy together(1997), In the mood for Love (2000), Chunking express (1994), Fallen angels(1995), 2046 (2004), Days of being wild(1990), My blurbery nights(2007), As tears go by(1988) பிரதானமாகக் குறிப்பிடத்தக்கவை.  என்ன எல்லாமே ஒரே வகையான உணர்வுத்தளம்தானே என்று எடுத்த Read More