Stop Raping Us

STOP RAPING US

Cannes திரைப்பட விழா நிகழ்வில் சிவப்புக் கம்பள வரவேற்பில் பெண்ணியச் செயற்பாட்டாளர் தன் நிர்வாண உடலில் உக்ரைன் கொடிநிறத்தின் மீது “Stop Raping Us” என வரைந்து வன்புணர்வுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் முகமாக ஆக்ரோஷமாக அலறிய  சம்பவம் அனைவரையும் நிலை குலையச்செய்தது. அங்கு அவர் கோருவது தார்மீகமாய் அவர் மீதான கவனக்குவிப்பு. ஊடகங்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்த நினைத்ததை நிகழ்த்திட (பேசிட)ஒரு வாய்ப்பு. இத்தனைக்கும் Cannes திரைப்பட ஆரம்ப நிகழ்வு உக்ரைன் அதிபரின் உரையுடன்தான் ஆர்பித்தது. (“It’s necessary for cinema not to be silent.”-Volodymyr Zelensky) உலகின் தலை சிறந்த  படங்களை தேர்வு செய்தும் அவற்றை அங்கீகரிப்பவர்களாகவும் கலையின் முன்னோடியாக முன்னிறுவிக்கொள்ளும் Cannes திரைப்பட விழா ஒரு பெண்ணின் நிர்வாணத்தையும் ஆக்ரோஷத்தையும் கண்டு பயம் கொள்கிறது. உடனே  அங்குள்ள காவலாளிகளும் சுற்றியுள்ளவர்களும் அருவருப்பாக அப்பெண்ணைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு அவரது உடலை மூடி  அவ்விடத்தைவிட்டே அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். கலை, சினிமாத்துறை, ஃபேஷன் மாடலிங் துறை பெண்ணுடல் குறித்து எத்தகைய புரிதல்களை இந்த நாகரீக முதலாளித்துவ முட்டாள்களுக்குள் தற்காலத்தில் ஏற்படுத்தியுள்ளது என்று சிந்திக்கையில் வியப்பாக உள்ளது. முதலாளித்துவம் கோரும் உடலுக்கு எதிரான உடல்  இல்லையா பெண்ணின் அப்பட்டமான நிர்வாண உடல்?சங்கடமாகத்தான் இருக்கும். உடலின் சுய வெளிப்பாட்டிற்கு, எதிரானவர்கள் இல்லையா இந்த பூர்ஷுவாக்கள்? அவர்கள் நிர்ணயிக்கும் உடையுடன், உடல்வாகுடன், கவர்ச்சித் தோற்றத்துடன் சிவப்புக் கம்பளத்தில் Arrogant ஆக நடை பயில வேண்டும். மனிதனின் Vulnerabilityக்கோ ஒடுக்குமுறைக்கெதிரான (Aggressive voice) ஆக்ரோஷமான Read More

திட்டம் இரண்டு (2021) திரைப்படம் எதன் அடிப்படையில் ட்ரான்ஸ்போபியா?

மாற்றுப்பாலினத்தவரின் தினசரிகளோ அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சமூக நெருக்கடிகளோ ஆவணப்படுத்தப்படாமல் ஒருதலைக் காதலின் போராட்டம் என்னும் பெயரில் (அதுவும் சிறுவயதில் முதன் முதலாக எதிர்கொள்ளும் பாலீர்ப்பு காதலின் நீட்சியாகவே கதை தொடர்கிறது) அவர்களின் பாலினத்தை பரிதாபகரமாக காட்ட முனைந்து இறுதியில் Transphobic பார்வையில் “ஆள் மாறாட்ட மோசடியாக” காட்சிப்படுத்தி கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.பாலின அடையாள நெருக்கடியிலுள்ளவரின் குரலை முன்நிலைப்படுத்தாமல் பார்வையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரே நோக்கில் திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது. படம் பாலின மாற்று அறுவை சிகிச்சையைப் (gender reassignment surgery ) புதிதாக தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்த முனையும் தொனியில்  எதிர்பாராத அதிர்ச்சியை மட்டுமே பின்புலமாக வைத்து (அந்த அதிர்ச்சியும் அறுவை சிகிச்சை மூலம் ஓர் பெண் ஆணாக மாறியுள்ளார் பாருங்கள் என்கிற வினோதத்தன்மை பொருந்திய ஆச்சர்யத் தொனியுடன்) thriller elements மூலம் பார்வையாளர்களை exploit செய்கிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதிரா கதாப்பாத்திரம் (ஐஸ்வர்யா ராஜேஷ்) போலீசாக இருந்தும் ஒரு பெண்ணாக க்ளைமேக்ஸ் வரை மாற்றுப்பாலினமாக காட்சிப்படுத்தப்படும் ஆண்  கதாப்பாத்திரம் மற்றும் டாக்டர்,போலீஸ் என ஒரு கூட்டத்தால் அலைக்களிக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார். இத்தனையும் எதற்காக?   மாற்றுப்பாலின சிகிச்சை மேற்கொண்ட நபர் தன் பிறப்பு பாலினஅடையாளத்தை மட்டுமல்லாது தன் பிறந்து வாழ்ந்த முழுச் சுவட்டையுமே அழித்து தான்கொல்லப்பட்டதாக புனைந்து குடும்பம், சமூகம் என அத்தனை பேருக்கும் பயந்து அனைவரையும் ஏமாற்றி தன் புது அடையாளத்தை நிறுவிக்கொள்ள.இன்னும் தான் சிறுவயதிலிருந்து ரகசியமாக விரும்பிய பெண்ணை அடைந்து Read More

“Visitor Q”(2002) திரைப்படம் குறித்தான ஒரு பார்வை

அறிமுகம்   ஜப்பானிய திரைச்சூழலில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ச்சியாக கல்ட் (Cult) திரைப்படங்களை உருவாக்கிக் குவிக்கும்  இயக்குனர்  Takashi Miike, 1991 அறிமுகமானதிலிருந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.பெரும்பாலும் சர்ச்சைக்குரிய என்று வகைப்படுத்தப்படும்  திரைப்படங்களுக்கான தேவையும் தனி ரசிகர் பட்டாளங்களும் உருவாகி பெருகிவளர்ந்து கொண்டிருக்கிறது. வி-சினிமாத்துறைனுள் (V-Cinema industry) குறைந்த செலவில், கையிலுள்ள வளங்களைக் பயன்படுத்தி  மாத்திரம்  உருவாக்கப்படும் Direct-to-video பாணியில் தணிக்கைக்குளுக்களின் தலையீடின்றி மும்முரமாகவும் சுதந்திரமாகவும் வருடத்திற்கு ஏழு படங்கள் வரையில் இயக்கும் சாத்தியப்பாட்டை நிகழ்த்தி ஜப்பான் சுயாதீன இயக்குனர்களில் தவிர்க்கவியலாதவொரு இடத்தைப் பெற்றிருக்கிறார்  இயக்குனர் டக்காஷி மிக்கே. ஒளிவுமறைவில்லாமல் வன்முறைகள், நிர்வாணக் காட்சிகளை பதிவு செய்தல், பார்வையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச்  சூழல்களை தோற்றுவித்தல் இயக்குனரின் பிரதான போக்கு எனலாம். குறிப்பாக ஜப்பான் சமூகத்தின் இளைஞர்களின் அத்துமீறல் போக்கு, குடும்ப அமைப்பு, பாலின அரசியல், வன்புணர்வு,பாலியல் சிக்கல்கள், Bullying, சாமுராய்கள் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பானில் பிரத்தியேகமாக உருவான யக்குசாக் குழுக்களின் வாழ்வியல் என ஏகப்பட்ட தளங்களை தயவு தாட்சண்யமின்றி அப்பட்டமாக விமர்சிக்கிறார். பெரும்பாலான திரைப்படங்களில் கதைக்களங்கள் Bullyingஐயே மையப்படுத்தியமைந்திருக்கும். இன்னும் காமிக்ஸ்களை திரையாக்கும் பாணியும் விரவிக்காணப்படும். திரைப்படங்கள் பேசும் கருத்தியலின் அடர்த்தியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள மிக ஆர்வமூட்டும் அதே சமயம் அதிர்ச்சியை மேலோங்கச்செய்யவும் தவறவிடவில்லை. ஒரு திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட வன்மக் காட்சிகளை பிற திரைப்படங்களில் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு புதுப்புது யுக்திகளை வன்மங்களை Read More

நிறம் பார்க்கும் கேமராக்களின் அரசியல்.

சினிமா மனித இருத்தலின் ஒப்பற்ற ஆவணம். அதன் கலாச்சார தாக்கமானது சமூகங்களின் பார்வையை நிர்ணயிப்பது மட்டுமல்லாது அதன் தோற்றத்தை நிர்ணயிப்பதையும் கூட சாத்தியமாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் கண்ணாடியாக சினிமா பார்க்கப்படும் பொழுது, அந்த கண்ணாடியில் நிலழாடும் பிம்பங்களே அந்தசமூகத்தின் தோற்றத்தினை வடிவமைக்கிறது.அமெரிக்க சினிமா உலகெங்கும் பெரும் காலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அமெரிக்க சினமாவின் முகங்கள் யாருடையது? அது ஒட்டு மொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்புகயில், சினிமாவின் வரலாற்று நெடுகிலும் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகளை சந்தித்தே வந்திருக்கின்றனர் என்பது விளங்கும். அந்த புறக்கணிப்பு மனநிலையில் இருந்து தோன்றிய அவர்களின் பிம்பங்கள் இயல்பிற்கு மாறாக உருக்குலைகப்பட்டு, அமெரிக்க சமூகத்தில் நிலவிய நிறவெறியின் நீட்சியாக எவ்வாறு விளங்கியது? குறிப்பாக புகைப்பட கருவிகளின் தொழில்நுட்பம் ஆபிரிக்க அமெரிக்க மக்களின் நிறத்தையும்  உருவத்தையும் பற்றிய எதிர்மறை கருத்துருவாக்கங்களுக்கு எவ்வாறு பயன்பட்டது? என்பதை இந்த கட்டுரை விவாதிக்கிறது. அந்த விவாதத்தினூடே இருந்து இந்திய சினிமாவில் அத்தகைய தொழில்நுட்பம் உருவாக்கிய சமூக ஊடரசியல் என்ன? அதன் தற்கால தாக்கம் இன்றைய சினிமாவின் தோற்றத்தையும் வடிவத்தையும் எவ்வாறு பாதிக்கிறது? என்ற பார்வையையும் இந்த கட்டுரை வழங்க முயற்சி செய்கிறது. எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நம்முடைய வீடுகளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை நாம் திருப்பிப்பார்த்தால் இயல்பை விட நமக்கு தெரிந்தவர்கள் அடர் கருப்பாக தோற்றமளிப்பதை கவனித்திருப்போம். ‘கண்ணும் பல்லும் மட்டும் பளிச்சுன்னு தெரியுது பாருன்னு’ கருப்பாக இருக்கும் Read More

ஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)

தற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு  ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம்  கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும். சென்ற வருடம்  ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும்  Read More

சுயத்தின் அதிருதிப்திகள் (Girl 2018)

தன் பாலினம் குறித்து பதட்டம் கொள்ளச்செய்யவும்,பெரும்பான்மை சமூகம் அங்கீகரிக்கக்கூடிய உடலியல் கூறுகள், இன்னபிற  அலங்காரங்களைக்கொண்டு தன்னைக்குறித்த பாலினத்திற்குள் வகைப்படுத்தி அடைத்துக்கொள்வதற்கும் ஏதுவாகவே சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது. புறத்தோற்றம் மற்றும் பாலியல் உடற்கூறுகளைக் கொண்டுதான் ஒருவறது பாலினம் தீர்மானிக்கப்பட்டு சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரங்களும் இன்னபிற சலுகைகளும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றதெனில், சமூகத்தில் பாலினம் பற்றிய இருப்பு குறித்து  சிந்திக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இன்னும் தற்காலத்தில் தன் இயல்பான உடலை தானே வெறுக்கச்செய்ய, தன் உடலியல் கூறுகள் குறித்து மனதளவில் அதிருப்தியடையும் நிலையை உருவாக்கக்கூடியவாறே பாலின அரசியல் சமூகத்தில் இறுக்கமாக  நிறுவப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு நபரின்  பாலின அடிப்படையைக் கொண்டு “இவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் அல்லது வாழவேண்டும்” என்று குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு பல்வேறான அழுத்தங்களை கொடுக்குமிடத்து, அந்நபர் உளவியல்,உடலியல் ரீதியாக எந்தளவுக்கு சுய சந்தேகத்துடனும் சுய வெறுப்புடனும் வெறுமையாக தன்  தினசரி வாழ்க்கையைக் கடத்துவார் என்பது பெரும்பான்மையாக பேசாப் பெருந்துயர். Gir(2018) திரைப்படம் “பெண்ணாக” மாறத்துடிக்கும் இளம் மாற்றுப்பாலின பாலே நடனத்தில்(ballet dance) பேரார்வமிக்க Lara எனும் கதாப்பாத்திரத்தின் உளவியல், உடலியல்,பாலியல் சிக்கல்களை ஆராய முனைகிறது.Nora Monsecour எனும் தேர்ச்சிபெற்ற பாலே நடனகலைஞரின் உண்மைக்கதையின் மையத்தை மேம்போக்கான அடிப்படையில் உள்வாங்கி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.பருவவயதை எத்தனிக்க தயாராகவிருக்கும் லாரா ஒரு பெண்ணாக இருக்க விரும்பி பாலின மறுசீரமைப்பிற்கான சிகிச்சைகளை(gender reassingment surgery)மேற்கொண்டு வரும்போது அதில் முழுமையாக நம்பிக்கையும் பொறுமையுமற்றவராக காணப்படுகிறார்.தாராள வாத,தொழிநுட்பத்தில் Read More

what will people say (2017)

“கலாச்சார மோதல்களும் முரண்களும் என்றைக்கும் முடிவற்றது”. கீழைத்தேய நாடுகளிலிருந்து பொருளாதார மட்டத்தில் செழிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மாத்திரம் நோக்காக கொண்டு புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெற்றோர் மற்றும் அவர்களின் சந்ததியினர் எதிர் நோக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று கலாச்சார முரண்களும் அவை சார்ந்த அடக்குமுறைகளும். ஐரோப்பா செல்லும் பெரும்பாலரின் நோக்கம் பொருளியல் ஈட்டுவது மட்டுமே. இன்னும் தங்களது கலாச்சாரப் பண்பாட்டு வரைமுறைகளைப் மேலைத்தேய நாடுகளிலும் பேணிப்பாதுப்பதென்னும் பெயரில் பெண் பிள்ளைகள் மீது மாத்திரம் அத்தனை அடக்குமுறைகளையும் நிறுவுவதுதான் நியதி. அடுத்து இத்தகைய புலம்பெயர்வாழ் மக்களுக்கு அங்கு வாழும் ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரமும் பண்பாடுகளும் அருவருப்பூட்டுபவை,அசிங்கமானவை. இத்தகையவர்களால் அங்கு வாழ்பவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் அங்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கை, வசதி வாய்ப்புகள் அனைத்தும் இவர்களுக்கு தேவை.இன்னும் மதம்,கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாமே பெண்ணைச்சுற்றி மட்டுமே என்பதற்கிணங்க ஏற்ற தாழ்வுகள் வன்முறைகள் அனைத்தும் சொந்த வீட்டிலேயே நிகழும். ஒரு மனிதன் சுய பிரக்ஞையுடன் விரும்பி மேற்கொள்ளும் ஒரு விடயத்தை மதிப்பீடு (judgement) செய்வதும், குற்ற உணர்வை(guilty) மேலோங்கச்செய்து வேடிக்கை பார்ப்பதும் தான் நம் பழமைவாய்ந்த சமூகங்களின் உன்னதமான பண்பாடு.குறிப்பாக “சமூகம் என்ன சொல்லும்?” என்னும் கேள்விகள் மற்றும் புலம்பல்களுடனேயே நம் வாழ்வை நிதமும் கடத்தி தொலைத்து விடுகிறோம்.குடும்பம்,சமூகம் என்னும் கட்டமைப்பே மனிதனது ஆறுதலுக்கும் அரவணைப்புக்கும் தானே!ஆனால் இங்கே நிகழ்வது என்ன ? அன்பு, பாசம்,அரவணைப்பு என்னும் பெயரில் உணர்வுகளைக்கொட்டி அடக்குமுறை மேற்கொள்வது. Read More