ஏகாதிபத்திய அரசுகளின் ஒற்றுமை (Der Baader Meinhof Komplex -2008)

தற்சமயம் இந்தியாவில் நிகழ்ந்துவரும் அரச வன்முறை உலக அரசியல் நடைமுறைக்கும் மானுட வரலாற்றுக்கும் புதியதல்ல. அதிலும் சிஏஏ/என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்களின் பின்புலத்தில் இங்கிருக்கும் முன்னணி கல்வி நிறுவனங்களில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவைக் கொண்டு சேர்க்கும் இடம் குறித்த எந்த விதக் கவலையும் இந்திய அரசுக்கிருப்பதாகத் தெரியவில்லை.வேறெப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்திய வலதுசாரி மற்றும் இந்துத்துவக் கருத்தியலை பின்பற்றுபவர்கள் இந்திய நாட்டை ஒரு  ஏகாதிபத்திய (Imperialist) அரசாகப் புனையத் துவங்கியுள்ளனர். மண்ணின் வரலாற்றை மிகைப் பிரகடனம் செய்தல், மன்மோகன் சிங் காலத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகப் புழக்கத்துக்குள்ளாகியிருந்த ‘ஜிடீபி’ என்ற சொல், உலகில் அச்சமயம் இந்தியா வெளிப்படுத்தியிருந்த மிதமிஞ்சிய பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறி மற்றும் அண்டை நாட்டு உறவுகளை குழந்தைமை ததும்பும் முதிர்ச்சயின்மையுடன் அணுகுதல், என ஒட்டுமொத்த உலகில் ‘தம் இருப்பே மகத்தானது’ என்று மார்தட்டிக் கொள்ளும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் தான் இந்தியா தற்பொழுது உலகின் கண்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. தேசப்பற்று எனும் பூடகச் சொல்லுக்கு சுயநியாயம்  கற்பித்தவாறே தனது முரட்டுத் தனத்தை அதுவரை அண்டை நாடுகளின் மீது வெளிப்படுத்தி வந்த இந்தியா, அவ்வாறு நடந்து கொள்ள அந்நாடுகளும் தற்பொழுது போதிய பின்புலங்களை வழங்காமல் இருப்பதன் விளைவாக, இப்பொழுது அதே வன்மத்தையும் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டவர்கள் மீது செலுத்த இவ்வரசு துளியும் தயங்காமல் இருப்பதை நம்மால் கிரகிக்க இயலும். சென்ற வருடம்  ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை மற்றும்  Read More